கார் விபத்தில் கன்னட டி.வி. நடிகை பலி

கன்னட டி.வி. நடிகை ஷோபா காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நடிகை ஷோபா உடல் நசுங்கி பலியானார்.

Update: 2019-07-19 22:30 GMT
பிரபல கன்னட டி.வி. நடிகை ஷோபா. இவர் ‘மகளு ஜானகி’ என்ற தொடர் மூலம் கன்னட ரசிகர்களால் அறியப்பட்டார். மேலும் பல டி.வி. தொடர்களில் நடித்து இருக்கிறார். பாகல் கோட் மாவட்டத்தில் உள்ள பன்சங்கரி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஷோபா தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அந்த காரில் 8 பேர் இருந்தனர்.

சித்ர துர்கா என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு லாரியின் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஷோபா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருக்கு வயது 45. காரில் இருந்த அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகிய மேலும் 4 பேரும் அதே இடத்தில் பலியானார்கள்.

மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் டயர் பஞ்சர் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஷோபா மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்