வலைத்தளத்தில் வைரலாகும் கதை கமலின் இந்தியன்-2 கிளைமாக்ஸ் கசிந்ததா?

இந்தியன்-2 படத்தின் கதை என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கதை வைரலாகி வருகிறது.

Update: 2019-09-18 23:00 GMT
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பூந்தமல்லியிலும் தியாகராய நகரில் ஒரு ஓட்டலிலும் படப்பிடிப்பை நடத்தினர். சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பை ஆந்திராவுக்கு மாற்றி உள்ளனர். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக கமல்ஹாசன் ஆந்திரா செல்கிறார். படத்தின் கதை என்று ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஒரு கதை வெளியானது. சித்தார்த்தும் அவரது மனைவி ரகுல் பிரீத் சிங்கும் யூடியூப் சேனல் நடத்துகின்றனர். அதில் அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளியிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த அரசியல்வாதிகள் இருவரையும் தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்கள். அப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் வயதான கமல்ஹாசன் இருவரையும் காப்பாற்றுகிறார். பின்னர் ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை சித்தார்த்திடம் இருந்து வாங்கி அவர்களை வர்ம கலையால் தீர்த்து கட்டுகிறார். மொத்தம் 7 பேரை அவர் கொலை செய்கிறார் என்று அந்த கதையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் என்ற பெயரில் தற்போது இன்னொரு கதை வைரலாகிறது. அதன்படி ஊழல் அரசியல்வாதிகளை கொலை செய்த பிறகு கமல்ஹாசன் போலீசில் சரண் அடைகிறார். கோர்ட்டில் வழக்கு  நடக்கிறது. கமல்ஹாசனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.  தண்டனையை நிறைவேற்றுவதுபோல் படம் முடிகிறது.

இது இந்தியன்-2 கிளைமாக்ஸ்தானா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் இந்த கதை வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதான்  கிளைமாக்ஸ் என்றால் இந்தியன் மூன்றாம் பாகம் வெளிவராது என்று கூறப்படுகிறது. விஜயகாந்தின் ரமணா படத்தில் இதுபோன்ற மரண தண்டனை கிளைமாக்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்