டெல்லி காற்று மாசு: விஜய் படப்பிடிப்புக்கு சிக்கல்

விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2019-11-06 00:00 GMT
விஜய்க்கு இது 64-வது படமாகும். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? நண்பனாக வருகிறாரா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா ஆகியோரும் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக தகவல். சாந்தனு கல்லூரி மாணவராக வருகிறார். அவருக்கு வில்லன் வேடம் என்று கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிந்தது. தற்போது டெல்லியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக விஜய் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. படக்குழுவினரால் வெளியே வரமுடியவில்லை. காற்று மாசு குறைந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்