கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகாவை சாடிய ரசிகர்கள்

நடிகைகள் சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பட விழாக்களுக்கும் கவர்ச்சி உடைகளில் வருகிறார்கள்.

Update: 2019-12-18 23:30 GMT
 புதிய படங்களில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக இப்படி அவர்கள் செய்வதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் பிரச்சினையில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. 

யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். கவலை வேண்டாம், துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, கழுகு-2, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவன்தான் உத்தமன் என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த யாஷிகா இப்போது எல்லை மீறிய கவர்ச்சி உடையில் புதிதாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் யாஷிகாவை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.

இதெல்லாம் இரு டிரெஸ்சா நீங்கள் அடங்க மாட்டீர்களா? நாடே ரணகளத்தில் இருக்கிறது, இப்போது இது தேவைதானா? என்றெல்லாம் விமர்சித்தும், கேலி செய்தும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்