‘குண்டு,’ ‘காளிதாஸ்’ படங்களை மீண்டும் திரையிட வேண்டும்” டி.சிவா வேண்டுகோள்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.

Update: 2019-12-22 23:38 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.சிவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.

“சமீபத்தில் வெளியான “குண்டு” காளிதாஸ் போன்ற தரமான திரைப்படங்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இருந்தும், தொடர்ந்து வாரா வாரம் வெளியாகும் திரைப்படங்களால் கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்கள் ஓட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு மேற்படி குண்டு, காளிதாஸ் ஆகிய 2 திரைப்படங்களையும் முடிந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் மீண்டும் திரையிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்