அரசுக்கு ஒத்துழைக்க ஹேமமாலினி வேண்டுகோள்
வைரஸ் பாதிப்பை குறைக்க அரசுக்கு ஒத்துழைக்குமாறு ஹேமமாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. வெப்ப நிலை அதிகம் இருப்பதால் நமது நாட்டில் பரவ வாய்ப்பு இல்லை என்றனர். ஆனால் அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டி இருக்கிறது. பயங்கரமான இந்த வைரசுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. நாம் அனைவரும் அரசாங்கம் சொல்வதை கேட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதை பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும்.