உழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் - ராகவா லாரன்ஸ்
உழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் என ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் ராகவா லாரன்ஸ் உழைப்பாளர் தினத்தையொட்டு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் முடங்கிபோயுள்ள நமது தொழில்கள் அனைத்தும், இந்த பேரிடலிருந்து மீண்டு, நாம் மறுபடியும் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டுமென்று, நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியிடம் மனமுருக வேண்டிக்கொள்கிறேன்! அன்புடன்...ராகவா லாரன்ஸ்!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் அஜித்குமார் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தார். அதில் கூறியிருப்பதாவது: அஜித் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துக்காகவும் வளங்களைபெறவும் ராகவேந்திர சுவாமியை பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
I wish Ajith sir a very happy birthday. I pray to Raghavendra Swamy for his good health and wealth.. pic.twitter.com/aqkewweUyf
— Raghava Lawrence (@offl_Lawrence) May 1, 2020
— Raghava Lawrence (@offl_Lawrence) May 1, 2020