உங்களுக்கு 3 வயதாகிவிட்டது; மகளின் பிறந்தநாளில் உருக்கமாக வாழ்த்து கூறிய துல்கர் சல்மான்!

மகளின் பிறந்தநாளில் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அனைவரையும் உருக வைத்துள்ளது.

Update: 2020-05-06 07:09 GMT
சென்னை,

தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.  நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் வரனே அவஷியமுண்டு. இந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டதால் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான். தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் துல்கர் சல்மான் தனது மனைவி அமல் சூஃபியா மற்றும் மகள் மரியம் அமீராவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் துல்கர் சல்மான் நேற்று அவரது மகள் மரியமின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், மகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங் மேரி. "நான் இப்போது ஒரு பெரிய பெண்!" என்று நீங்கள் வற்புறுத்தி எங்கள் எல்லோரையும் உங்கள் வயதை போல் நடிக்க வைக்கிறாய். ஒரு வேளை நீ சொல்வது சரிதான். நீங்கள் வேகமாக வளர்ந்து வருகிறீர்கள், இப்போது முழு வாக்கியங்களில் பேசுகிறீர்கள். உங்களுக்கு 3 வயதாகிவிட்டது. நீங்கள் இப்போது ஒரு பெரிய பெண். உங்கள் இளவரசி ஆடைகளில் சுழலுகிறீர்கள். இப்போது நீங்களே சொந்தமாக விளையாட்டுக்களை உருவாக்குகிறீர்கள். எங்களுக்கு கதைகளைச் சொல்கிறீர்கள், நீங்கள் இப்போது பெரிய பெண். நீங்களே சொந்தமாக நடக்கிறீர்கள்.. ஓடுகிறீர்கள்.. எப்படி குதிப்பது என்பதைக் கற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் இப்போது ஒரு பெரிய பெண்.மெதுவாக வளருங்கள் டார்லிங் மேரி, இன்னும் ஒரு குழந்தையாக இருங்கள்.

நாங்கள் உங்களை முதன்முதலில் பார்த்த நாள் போல. அதாவது உங்களை முதலில் பார்த்தது மற்றும் உங்கள் அழுகையை முதல் முறையாகக் கேட்டது. முதல் முறையாக ஒரு தேவதையை சந்திக்க அவர்கள் ஹாலில் திரண்ட நாள். இன்னும் அந்த பெண் குழந்தையாக இருங்கள், அதுவே எங்களுக்கு போதுமானது. 
என்றென்றும் நீங்கள் எங்களுக்கு குழந்தைதான், உலகமே அவள் இப்போது ஒரு பெரிய பெண் என்று சொன்னாலும். வேகமாக வளர வேண்டாம், டார்லிங் மேரி, எங்கள் பெண் குழந்தையாகவே இன்னும் இருங்கள் என அதில் பதிவிட்டுள்ளார். 

மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்