கொரோனாவால் டைரக்டர் மரணம்

டைரக்டரும் முன்னாள் திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவருமான மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Update: 2021-05-26 00:40 GMT
டைரக்டரும் முன்னாள் திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவருமான மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

மறைந்த மோகன் காந்திராமன் பழம்பெரும் டைரக்டர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழில் செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். பாண்டிய ராஜனுடன் கில்லாடி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்