பிரபல டைரக்டர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் மரணம்

பிரபல பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் ஜி.என்.ரங்கராஜன் மரணம் அடைந்தார்.

Update: 2021-06-04 01:03 GMT
பிரபல பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் ஜி.என்.ரங்கராஜன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.

டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக ஜி.என்.ரங்கராஜன் பணியாற்றி பின்னர் டைரக்டரானார். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, மகராஜன், கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். முத்து எங்கள் சொத்து, மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி, அடுத்தாத்து ஆல்பர்ட் உள்பட 13 படங்களை இயக்கி உள்ளார்.

மரணம் அடைந்த ஜி.என்.ரங்கராஜனுக்கு சக்குபாய் என்ற மனைவியும் ஜி.என்.ஆர். குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ஜி.என்.ஆர். குமாரவேலனும் இயக்குனராக உள்ளார். இவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தை இயக்கி வருகிறார். ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்