பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளமான பூஷன்குமார் மீது பாலியல் புகார்

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளரான டி-சீரிஸின் நிர்வாக இயக்குனரான பூஷன்குமார் மீது 30 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து உள்ளார்.

Update: 2021-07-16 11:02 GMT
மும்பை

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் , இசையமைப்பாளமான பூஷன்குமார். டி-சீரிஸின் நிர்வாக இயக்குனராக பூஷன் குமார் உள்ளார். இவர் மறைந்த பாடலாசிரியர் குல்ஷன் குமாரின் மகன் ஆவார்.

இவர்   மீது  30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தனது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மாடல் அழகியும் , நடிகையுமான ஒருவர் டி.என்.நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆகஸ்ட் வரை பூஷன் குமார் தன்னை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்  குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய அந்தரங்க வீடியோவை இணையதளங்களில் வெளியிடப்போவதாக பூஷன் குமார் மிரட்டியதாக கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்