ரேகாவை போலவே ரூபிணியும்...

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ரூபிணி இப்போது மும்பையில் தொழில் அதிபராக இருக்கிறார்.

Update: 2021-07-25 06:08 GMT
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ரூபிணி இப்போது மும்பையில் தொழில் அதிபராக இருக்கிறார். இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த அவர், 1987-ல் ‘கூலிக்காரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.

ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.

1995-ம் ஆண்டில், மோகன்குமார் ராய்னா என்ற மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வாழ்ந்து வருகிறார். ‘கடலோர கவிதை’ ரேகாவைப் போலவே இவருக்கும் ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார். இவரும் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார்.

மேலும் செய்திகள்