அம்மா - மகன் பாசத்தில் பிரபுதேவா - ஈஸ்வரிராவ்
அம்மா-மகன் பாசத்தை மையமாக வைத்து, ‘தேள்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஏ.ஹரிகுமார் டைரக்டு செய்த படம், இது.
இதில் பிரபுதேவா, ஈஸ்வரிராவ் இருவரும் அம்மா-மகனாக நடித்துள்ளனர். அம்மா, மகன் பாசத்தை மீண்டும் திரையில் சொல்லும் படைப்பாக இது உருவாகி இருக்கிறது.
பிரபுதேவா தன் திரையுலக வாழ்க்கையில், நடனம் ஆடாமல் நடித்து இருக்கிறார். ஒரு சிறு நடன காட்சி கூட இல்லாமல், முழுக்க முழுக்க நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அவரின் இன்னொரு பக்கத்தை படத்தில் காணலாம் என்று டைரக்டர் ஹரிகுமார் கூறினார். அவர் மேலும் கூறும்போது...
‘‘பிரபுதேவா இந்த படத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருக்கிறார். இடது கை பழக்கம் உள்ளவராக அவர் வருகிறார். அவருக்கு வசனம் குறைவாகவே உள்ளது. முழுக்க முழுக்க முகபாவனைகளில் உணர்வை பிரதிபலித்துள்ளார். அவருடைய திரைவாழ்க்கையில் இந்த படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும்’’ என்றார்.