ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான நடிகர் சிம்பு சந்திப்பு ஒத்திவைப்பு..!

ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான நடிகர் சிம்பு சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-03 16:30 GMT
சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுடனான வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தினர். நடிகர் சிம்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு வர முடியாமல் போனது.

இதையடுத்து நடிகர் சிம்பு வருகிற ஜனவரி 6-ந்தேதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், நடிகர் சிம்பு ரசிகர்களுடனான வெற்றி விழா கொண்டாட்ட கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒமைக்ரான் வழக்குகள் அதிகரித்து வருவதால், ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜனவரி 6-ந்தேதி தீர்மானிக்கப்பட்டிருந்த 'மாநாடு' வெற்றி சந்திப்பு தள்ளி வைக்கப்படுகிறது."

மேலும், அகில இந்திய சிம்பு ரசிகர்கள் சங்க செயலாளர் டி.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாநாடு வெற்றி விழாவுக்கான அதிகாரப்பூர்வமாக புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்