இந்தியா திரும்புகிறாரா அனுஷ்கா சர்மா?

தற்போது அனுஷ்கா சர்மா தன் குழந்தைகளுடன் லண்டனில் இருக்கிறார்.

Update: 2024-03-27 04:55 GMT

கோப்புப்படம்

மும்பை,

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தற்போது இந்த தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுஷ்கா சர்மா தன் குழந்தைகள் வாமிகா மற்றும் அகாய் உடன் லண்டனில் இருக்கிறார். முன்னதாக, ஐ.பி.எல். தொடர் தொடங்கி உள்ளதால் தன் கணவர் விராட் கோலியை சப்போர்ட் பண்ண இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தசூழலில், தற்போது வாமிகாவுக்கு 3 வயது ஆகிறது. இதனால் அவரின் படிப்பை கருத்தில் கொண்டு நர்சரி பள்ளியில் சேர்ப்பதற்காக அனுஷ்கா சர்மா இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அபிஷேக் பச்சன், அமீர் கான் ,கிரண் ராவ், ஷாருக்கான் ,கவுரி கான், ஹிருத்திக் ரோஷன் உள்பட பல பிரபலங்களின் குழந்தைகளும் இப்பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்