பஞ்சாப் நடிகை மீது புகார்!
ஒரு பெரிய டைரக்டரின் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், அந்த ‘பூ’ நடிகை. பஞ்சாப் அழகியான இவர், ஐதராபாத்தில் தங்கியிருந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இவரை, ஒரு புதிய படத்துக்காக, இரட்டை பெயர்களை கொண்ட டைரக்டர் ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாராம். முதல் நாள் படப்பிடிப்பிலேயே அந்த நடிகை, “எனக்கு கொடுக்கப்பட்ட உடைகள் பிடிக்கவில்லை” என்று தகராறு செய்து விட்டு, ஐதராபாத்துக்கு பறந்து விட்டாராம். இப்போது அந்த படத்தில், ‘பூ’ நடிகைக்கு பதில் ‘ஆ’ நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!