அமலாபாலின் தொண்டு நிறுவனம்!
அமலாபால் ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் அமலாபால், ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
இதுபற்றி அமலாபால் கூறும்போது, “கண்தான பற்றாக்குறையை நீக்க, ‘அமலா ஹோம்’ பாடுபடும். நான் என் கண்களை தானம் செய்ய இருக்கிறேன். பார்வையற்ற அனைவருக்கும் கண் பார்வை கிடைக்க செய்ய வேண்டும் என்பதே எனது தொண்டு நிறுவனத்தின் லட்சியம்” என்றார்!