மகனுடன், விஜய் சேதுபதி!

‘ஜுங்கா’ படத்தை அடுத்து விஜய் சேதுபதி, அருண்குமார் டைரக்‌ஷனில் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் நடிக்கிறார்.

Update: 2018-07-29 00:31 GMT
அருண்குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கியவர். இவருடைய புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற இருக்கிறது. அதில், விஜய் சேதுபதியுடன் அவருடைய மகன் சூர்யாவும் கலந்து கொண்டு நடிக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இந்த படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்! 

மேலும் செய்திகள்