ஷீலா ரூ.5 லட்சம் உதவி!
‘செம்மீன்’ (மலையாள) படத்தின் மூலம் பிரபலமாகி ஒரு காலகட்டத்தில், மலையாள பட உலகின் ‘நம்பர்-1’ நாயகியாக இருந்தவர், ஷீலா.
ஷீலா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.
ஷீலா தற்போது கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து, ஒரு சில படங்களில் மட்டும் நடிக்கிறார். அவர் நடிப்பது எல்லாமே அம்மா, பாட்டி வேடங்கள் என்பதால், குறைந்த சம்பளமே வாங்குகிறாராம்!