ரஜினிகாந்தின் அடுத்த படம்!
ரஜினிகாந்த் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷ னில் வெளிவந்த ‘பேட்ட’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த் அடுத்து யாருடைய டைரக்ஷனில் நடிப்பார்? என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதால், அந்த படத்தில்தான் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு கதையும் ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் டைரக்ஷனில் ‘கபாலி,’ ‘காலா’ ஆகிய 2 படங்களிலும் அடுத்தடுத்து நடித்தது போல், ‘பேட்ட’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் நடித்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்!