விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
‘கடாரம் கொண்டான்’ படத்தில், அக்ஷராஹாசன், நடிகர் நாசரின் மகன் அபிஹசன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, இந்த படத்தை இயக்குகிறார்.
ஜிப்ரான் இசையமைக்கிறார். இவருடைய இசையில், விக்ரம் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் தகவல்.