கதாநாயகர்களும், பஞ்சாயத்துகளும்...!
சமீபகாலமாக எல்லா பிரபல நாயகர்கள் நடித்த படங்களும் பல ‘பஞ்சாயத்துகள்’ நடந்த பிறகே திரைக்கு வருகின்றன.
சங்க தலைவராக இருக்கும் நடிகரின் படமும் இதற்கு விதி விலக்கு அல்ல. தனது சம்பளத்தில் ஒரு கோடியை விட்டுக் கொடுத்தபின், அவர் நடித்த படம் திரைக்கு வந்தது.
ஒரே ஒரு எழுத்தை பெயராக கொண்ட படமும் ‘பஞ்சாயத்து’க்கு வந்தது. இரண்டெழுத்து நாயகன் நடித்த அந்த படத்தின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டதாம்.
“இனிமேல் நான் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன். தெலுங்கு அல்லது இந்தி பட உலகுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்” என்கிறார், அந்த இரண்டெழுத்து நாயகன். பஞ்சாயத்தில் சிக்கி படாதபாடு பட்டதால், அவர் இவ்வாறு விரக்தியாக பேசினாராம்!