17 விருதுகளை வென்ற படம்!
‘ஒற்றை பனைமரம்’ என்ற படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி 17 விருதுகளை வென்றுள்ளது.
இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘ஒற்றை பனைமரம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்ற படம், இது. இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.
புதியவன் ராசையா இயக்கியிருக்கிறார். எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.