தவறாக நடக்க முயன்ற சாமியாரிடம் இருந்து தப்பித்த நடிகை

தவறாக நடக்க முயன்ற சாமியாரிடம் இருந்து நடிகை தப்பித்தார்.

Update: 2020-11-12 23:43 GMT

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா, வில்லன் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்ன பிறகு இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலமானது. நடிகைகள் பலர் தொடர்ந்து மீ டூ வில் பாலியல் தொல்லையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இன்னொரு நடிகை சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். அந்த நடிகையின் பெயர் அனுப்பிரியா. இவர் தெலுங்கில் மனோஜ் மஞ்சுவின் போட்டுக்காடு படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

இந்தியில் தீபிகா படுகோனேவுடன் பத்மாவத் மற்றும் பாபி ஜசூஸ், டாடி, டைகர் ஜிந்தா ஹே, வார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனுப்பிரியா கூறும்போது, “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் எனது தந்தை கடவுளை விட ஆன்மிகவாதிகளையும் சாமியார்களையும் அதிகம் நம்பினார். குறிப்பாக ஒரு சாமியார் மீது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதிக நம்பிக்கை வைத்தனர். நானும் நம்பினேன். ஆனால் எனக்கு 18 வயது இருக்கும்போது அந்த சாமியார் என்னை அவரது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முயன்றார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரிடம் போராடி தப்பித்து விட்டேன். அந்த சம்பவம் நீண்ட நாட்களாக எனது மனதை அழுத்தியது” என்றார்.

மேலும் செய்திகள்