மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா

ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-11-12 16:52 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்