டாக்சி டிரைவர் தற்கொலை எதிரொலி: வாடகை கார் ஓட்டுனர்கள் அடையாள வேலைநிறுத்தம்

வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-05 22:30 GMT
தரகம்பட்டி,

சென்னையில் டாக்சி டிரைவர் ராஜேஷ் போலீசாரின் துன்புறுத்தலினால் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தனியார் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரிவித்தனர். அதன்படி கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தனியார் ஆட்டோக்களும் நேற்று ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள் சிரமம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்