திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 910 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 910 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-05-02 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்து, தற்போது கோடை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம்் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகளை பொது வினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

910 டன் நெல்

அதன்படி நேற்று திருவாரூரை சுற்றி உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் 60 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 20 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 910 டன் நெல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்