கிள்ளை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை

கிள்ளை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-05-11 22:15 GMT
பரங்கிப்பேட்டை,

கிள்ளை அருகே உள்ள சி.மானம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் நாகை மாவட்டம் திருப்பனங்கால் பகுதியை சேர்ந்த பாரி மகள் ஆர்த்தி (வயது 25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் யோகித் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்த்தி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்த்தியின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாரி, கிள்ளை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆர்த்தி உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்த்திக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து சிதம்பரம் சப்- கலெக்டர் விசுமகாஜன் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்