சேரன்மாதேவியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

சேரன்மாதேவியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-09 21:45 GMT
சேரன்மாதேவி, 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பழைய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27) பெயிண்டர். இவருடையை மனைவி ஆனந்தி (வயது 24). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ராஜேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆனந்தி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் ராஜேசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் மனமுடைந்த ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று, ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்