கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சீரமைத்தனர்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சீரமைத்தனர்.

Update: 2019-08-12 22:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி வடக்குத்தெருவில் உள்ள பகவதிஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் புதர்மண்டி காணப்பட்டது. அதனை கன்னியாகுமரி நகர மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் முழுவதுமாக சீரமைத்தனர். இந்த பணியை குமரி மாவட்ட பொறுப்பாளர் சசி தொடங்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் நாராயணன், மணிகண்டன், மூர்த்தி சிவா, ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்