பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி

பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி இறந்தார்.

Update: 2019-12-04 22:30 GMT
பள்ளிபாளையம், 

சேலம் அம்மாபாளையம் ஏரி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 35). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையத்தில் வசித்து வந்தார். அதே பகுதியில் ஒரு சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து சங்ககிரி செல்லும் சாலையில் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று ரோட்டை கடக்க முயன்ற சுகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுகுமார் அதே இடத்தில் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்