கோவையில், சர்க்கரை நோய் பாதிப்பால் 16 வயது சிறுமி சாவு

கோவையில், சர்க்கரைநோய் பாதிப்பால் 16 வயது சிறுமி பரிதாபமாகஇறந்தார்.

Update: 2020-01-02 22:00 GMT
கோவை,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர்ராஜபாண்டி. இவருடைய மகள் சக்தி (வயது 16). இவருக்கு 11 வயது முதல் சர்க்கரைநோய் பாதிப்புஇருந்தது. எனவேஅவரை பெற்றோர் பல இடங்களுக்குஅழைத்து சென்றுசிகிச்சை அளித்து வந்தனர். அது போதிய பலன் அளிக்க வில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து சக்தியை அவரதுபெற்றோர் கோவைசுக்கிரவார்பேட்டையில்உள்ள உறவினர்வீட்டுக்கு கடந்தசிலநாட்களுக்குமுன்பு அழைத்து வந்தனர். பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குஅழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில்சிறுமிக்கு திடீர்உடல்நலக்குறைவுஏற்பட்டது. அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிறுமிக்குஊசி போட்டுவீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சக்தியின் உடல்நிலை மிகவும் மோசமானது. உடனேஅவரை கோவை அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்குசிறுமியை பரிசோதனைசெய்த டாக்டர்கள் அவர்ஏற்கனவேஇறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்துவெறைட்டிஹால்ரோடுபோலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்