திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சோமரசம் பேட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-07-18 06:50 GMT
சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டை அருகே உள்ள ராம்ஜிநகர் கோனார் தெருவில் வசித்துவருபவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீர்த்தனா(வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் தான் ஆகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கீர்த்தனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கீர்த்தனாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் துணை போலீஸ் சூப்பிரண்டும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்