செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 111 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-10-02 06:10 GMT
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 871ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 309 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,475ஆக உயர்ந்துள்ளது. 1,087 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்