900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-10-02 19:46 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 900 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்