ரூ.28¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.28¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Update: 2021-10-02 20:36 GMT
செம்பட்டு,அக்.3-
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி தனது காலணியில் மறைத்து 603.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்