அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் ராேஜஷ்(வயது 36). தொழிலாளி. இவர் குடும்பத்தினருடன் மேலூர் அருகே உள்ள முசுண்டகிரிபட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் மேலூர் பகுதியில் நேற்று பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. முசுண்டகிரிபட்டியிலும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ராஜேஷ் கண்மாய் பக்கம் நடந்து சென்ற போது மின்னல் தாக்கியதில் அவர் இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்னேவ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரபிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.