விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது- 4 பயணிகள் பிடிபட்டனர்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது தொடர்பாக 4 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

Update: 2023-10-02 18:45 GMT

தேவனஹள்ளி:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாய் உள்ளிட்ட நகரங்களில் தங்கம் கடத்தப்பட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சில பயணிகள் நடவடிக்கையில் அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணிகள் 4 பேர் தங்களது உடைமைகள், உடலில் மறைத்து தங்கத்தை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து தங்கம் கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்களை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் குறித்த தகவல்களை கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்