13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது

கடந்த 25 ஆம் தேதி பாலியாவில் உள்ள மணியார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர்.

Update: 2023-11-28 11:19 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 13 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் கடந்த 18 ஆம் தேதி ஏமாற்றி கடத்தி சென்றுள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து ஐதராபாத் அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை காணாததால் பதற்றமடைந்த சிறுமியின் தந்தை அருகில் இருந்த மணியார் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பாலியாவில் உள்ள மணியார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் சிறுமி கொடுத்த தகவலின் பேரில் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

அந்த நபர் நேற்று உள்ளூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

அந்த நபர் தன்னை ஐதராபாத்துக்கு கடத்திச் சென்று கிட்டத்தட்ட ஒரு வார காலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதைதொடர்ந்து அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்