அரியானாவில் அக்னிபத் முகாமில் போலி அனுமதி அட்டையுடன் 14 பேர் பிடிபட்டனர்

சண்டிகார் மாநிலம் ஹிசாரில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.

Update: 2022-08-19 22:45 GMT

சண்டிகார், 

சண்டிகார் மாநிலம் ஹிசாரில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்று 14 பேர், போலியான அல்லது திருத்தப்பட்ட அனுமதி அட்டையை பயன்படுத்தி முகாமில் பங்கேற்க முயன்றது தெரியவந்தது.

அக்னிபத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக அவர்கள் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்