காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2017-03-26 12:23 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் அவந்திபோரா பகுதியை சேர்ந்த 3 போலீஸ் உயர் அதிகாரிகள் படகம்போரா பகுதியில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை தொடர்ந்து சில போலீஸ் வாகனங்களும் சென்றன. அப்போது போலீஸ் அதிகாரிகளின் வாகனத்துக்கு பின்னால் ஒரு காரில் வந்த 2 பயங்கரவாதிகள் திடீரென போலீஸ் அதிகாரிகளுடன் சென்ற வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

போலீசாரின் இந்த அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் போலீசார் பயங்கரவாதிகள் வந்த வாகனத்தை சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த காரில் 2 துப்பாக்கிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கான அடையாள அட்டைகள் இருந்ததை போலீசார் கைப்பற்றினார்கள். இந்த தகவலை தெற்கு காஷ்மீர் துணை போலீஸ் ஜெனரல் எஸ்.பானி உறுதி செய்தார். காஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் சமீபகாலமாக போலீஸ் அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்களது வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு படையினர் அவர்களுடைய தாக்குதலை முறியடித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்