பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் என தகவல்

பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-04-28 15:50 GMT
புதுடெல்லி,

இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2, இதில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த ஆண்டே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருந்ததால் வெளியாவதில் கால தாமதமானது. 

கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றான் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று உலக முழுவதும் பாகுபலி-2 வெளியானது. இந்த படத்தை பார்பதற்காக பலர் திரையரங்குகளில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெடுகள் வாங்கினர்.
முதல் நாளிலேயே பாகுபலி ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுவரை எந்த இந்திய படமும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூல் செய்யவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்