நீட் தேர்வில் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது - மத்திய அரசு

நீட் தேர்வில் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2017-08-22 10:10 GMT
நீட் தேர்வு  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது.  என தெரிவித்தார்.

 அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வினை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.  நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையானது 'நீட்' தேர்வு அடிப்படையில் தான் நடக்க  வேண்டும் என்று தெரிவித்தனர்.நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் ஏற்கப்படாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

மேலும் மருத்துவ கலந்தாய்வினை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னரே முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்