ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், சின்னமும் நிதிஷ் குமாருக்கு கிடைத்தது
ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும், சின்னத்தையும் நிதிஷ் குமாருக்கு வழங்கி தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சரத் யாதவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மேல்–சபை உறுப்பினருமான சரத் யாதவ், நிதிஷ் குமாரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நிதிஷ் குமார் தலைமையில் ஒரு அணியாகவும், சரத் யாதவ் தலைமையில் மற்றொரு அணியாகவும் கட்சி பிளவுபட்டது.பின்னர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும், அதன் ‘அம்பு’ சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகள் சார்பிலும் தேர்தல் கமிஷனை நாடப்பட்டது.