குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம்
குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குஜராத்தின் வத்கம், விரம்கம், டஸ்க்ராய் மற்றும் சாவ்லி உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.