காஷ்மீரில் சிறுமி கற்பழிப்பு: நடிகை பார்வதி கண்டனம்

காஷ்மீர்ல் 8 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நடிகை பார்வதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-14 23:45 GMT
திருவனந்தபுரம், 

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னணி நடிகையான பார்வதி இந்த கற்பழிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டை ஒன்றை அவர் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த அட்டையில், ‘8 வயது சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்துக்கு நீதி வேண்டும்’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த சம்பவத்தால் தான் வெட்கி தலைகுனிவதாகவும் நடிகை பார்வதி அதில் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்