ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்

போலி முகவரியுடன் ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண் குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்.

Update: 2018-04-24 11:16 GMT
ஆக்ரா

உத்தரபிரதேசம் 2 இளம்பெண்கள் ஒருவரை  ஒருவர் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில், இதுகுறித்த தகவல் எதுவும் பெற்றோருக்கு தெரியவரவில்லை.

இரண்டு பெண்களில் ஒருவர் மணமகனாக மாறியுள்ளார். மேலும் தனது ஆதார் கார்டு மற்றும் தனது பெயரையும் கார்த்திக் சுக்லா என மாற்றிக்கொண்டு போலியான பெற்றோரின் உதவியுடன்  ஒரு பெரிய இலவச திருமன விழாவில் கலந்து கொண்டு திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் மணமகளின் வீட்டில் தங்கியிருந்தபோதுதான் மணமகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது மாப்பிள்ளையாக இருப்பது மற்றாரு பெண் என்று மேலும் இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இரண்டு பெண்களையும் வீட்டுக்குள் வைத்து பெற்றோர் அடித்து உதைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிள்ளனர்.இந்த பிரச்சினையை தீர்த்து வைத்த போலீஸ்  இரு பெண்களும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களை தனித்தனியாக வசிக்க வேண்டும் என்று கூற இயலாது என தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை ஒரு பாலின திருமணம் என்பது இயற்கைக்கு மீறிய உறவு என்பதால் அதற்கு இந்திய தண்டனை சட்டம், 377 - படி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்