இமாச்சல பிரதேச மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு - ரிக்டரில் 4.1 ஆக பதிவு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. #HimachalPradesh

Update: 2018-05-21 13:06 GMT
சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில்  கின்னௌர் என்ற இடத்தில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக  பதிவாகியது.  இந்த நிலநடுக்கம் மாலை 4.21 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். ஏராளமானோர் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை எந்த விதமான விபத்துகளும் நிகழ்ந்ததாக அதிரகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்