காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருகிறது பா.ஜனதா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவோம் என பா.ஜனதா தெரிவித்துள்ளது. #NoConfidenceMotion
புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் பொய்யான தகவல்களை தெரிவித்ததாக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவோம் என பா.ஜனதா அறிவித்துள்ளது.
மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார் பேசுகையில், “பாராளுமன்றத்தில் பொய்யான தகவல்களை வெளிப்படுத்தி, அவையை தவறாக வழிநடத்தியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவரும்,” என கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில் ராகுல் காந்தியின் செயல் மிகவும் குழந்தைதனமானது. துரதிஷ்டவசமாக அவர் இன்னும் வளரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் முதிராதது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.