டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி

டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-08-17 22:15 GMT
சென்னை,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று விமானத்தில் டெல்லி சென்று மதியம் ஒரு மணியளவில் வாஜ்பாய் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் மற்றும் விநாயகம் ஆகியோர் சென்றிருந்தனர்.

மேற்கொண்ட தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்